புதுக்கோட்டை கற்பகவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் 100 சதத்தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் 261 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவி ஆர்த்தி மாவட்டத்திலும், பள்ளியிலும் சிறப்பிடம் பெற்றார்.
பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவிக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளியின் அறங்காவலர் கவிதாசுப்ரமணியன் வாழ்த்துத் தெரிவித்தார்.