புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி ஏற்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம். எல்லா மக்களிடத்தும் அமைதி, சமுதாய ஒற்றுமை போற்றி வளர்க்கவும் மக்களுடைய உயிர்களுக்கு, நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் அரசு அலுவலர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, (கணக்கு) கார்த்திகாயினி, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், மாவட்ட நீதியல் மேலாளர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.