புதுக்கோட்டை அருகே நூறுநாள் வேலைத் திட்டப்பணிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட முதன்மை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி உத்தரவின்பேரில், புதுக்கோட்டை அருகேயுள்ள வாகவாசல் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களின் பணிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் ராபின்சன்ஜார்ஜ் ஆய்வு செய்தார். அப்போது, பணியாற்றிய 160 தொழிலாளர்களிடம் ஜாமின், சிவில் வழக்குகளில் வாதாடுவதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி சட்ட ஆலோசனைகள் பெறலாம் எனவும் தெரிவித்தார். வழக்குரைஞர்கள் சேகர், ரெங்கராஜு ஆகியோர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் தங்கராஜ்மாரியப்பன் செய்திருந்தார்.