புதுக்கோட்டை நகரிய துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி நேரம் மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதல், காத்தல்) எஸ். ராமசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுகை நகரிய (110-22.கேவி) துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சாந்தநாதபுரம், புதிய, பழைய பேருந்து நிலையம், சார்லஸ்நகர், கீழராஜவீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், கலீப்நகர், மருப்பிணிசாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.