அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி கிராமங்கள்தோறும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் முதற்கட்ட முகாம் புதுக்கோட்டை, குளத்தூர், கறம்பக்குடி தாலுகாக்களில் உள்ள விஏஓ அலுவலகங்களிலும், அதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள பிற தாலுகா அலுவலகத்துக்குள்பட்ட அனைத்து விஏஓ அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்களது மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன் ஆதார் எண்களை இணைத்துக் கொள்ளலாம்.