எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வெழுதிய 321 மாணவ, மாணவிகள் அனைவரும் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
ஜெயச்சந்திரன், ஸ்ரீஹரிணி, சுதர்சன் ஆகியோர் சிறப்பிடம் பிடித்தனர். மேலும், பல்வேறு பாடப்பிரிவுகளிலும் அதிகமான மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜெ. ஜோனத்தன், முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.