கந்தர்வகோட்டை காட்டுப்பகுதியில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
கந்தர்வகோட்டையில், திருச்சி- கந்தர்வகோட்டை சாலையில் பெரியகுளம் ஏரி பகுதியில் உள்ள ஆர்எஸ்பதி காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் 50 வயது மதிக்கத்தக்க தலை, முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.