புதுகையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி

புதுக்கோட் டை சாந்தநாதபுரத்தில் உள்ள ஊருணியை திமுக சார்பில் தூர்வாரும் பணியை புதுகை சட்டப்பேரவை உறுப்பினரும்,

புதுக்கோட் டை சாந்தநாதபுரத்தில் உள்ள ஊருணியை திமுக சார்பில் தூர்வாரும் பணியை புதுகை சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பெரியண்ணன்அரசு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுகை புதிய பேருந்து நிலையம் எதிரே சாந்தநாதபுரம் சுப்பையா குளத்தில் நடைபெற்ற இந்தப் பணிகளைத் தொடக்கிவைத்து பெரியண்ணன்அரசு பேசியது:
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளில் உள்ள நீர்நிலைகள், மக்கள் பயன்பாட்டில் உள்ள குளங்களில் திமுக தொண்டர்களால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுக்கோட்டை தொகுதியில் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, தொகுதி முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மழைக்காலம் தொடங்கும் முன் தூர்வாரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஆ. செந்தில், நகரச் செயலர் க. நைனாமுகமது, அவைத் தலைவர் ரெத்தினம், நிர்வாகிகள் டி. அப்புக்காளை, மதியழகன், முல்லை முபாரக், மணிமொழி மனோகரன், டாக்டர் வை. முத்துராஜா, ஆர்.எம்.எஸ். சத்யா, விஜயகுமார் முத்துக்கருப்பன், தியாகு, எஸ். மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com