பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பொன்னமராவதி பேரூராட்சியில் பாஜக செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் எம்.சேதுமலையாண்டி தலைமை வகித்தார்.
மாவட்ட பிரசார அணி தலைவர் அ. தங்கவேல், மாவட்ட அறிஞர் பிரிவு தலைவர் ஆர்எஸ். குஞ்சய்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராம்ஜி ஆகியோர் ஆற்றவேண்டிய பணிகள் குறித்துப் பேசினர். கூட்டத்தில், பேரூராட்சி பகுதியில் வார்டு வாரியாக கொசு மருந்து நாள்தோறும் அடிக்கவேண்டும். கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைத்தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுப்பட்டி, அரசு போக்குவரத்துப் பணிமனை ஆகிய இடங்களில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர்கள் எஸ்.சரவணன், எஸ்பி.ராஜவேலு, ராஜ்குமார், கோ.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.