ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில், குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை களப்பயிற்சி மேற்கொண்டனர்.
குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி நான்காமாண்டு மாணவிகள், கறம்பக்குடி வட்டத்தில், கறம்பக்குடி வட்டார உதவி வேளாண் இயக்குநர் பெரியசாமி, வேளாண் துணை அலுவலர் செல்வராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி மாங்கோட்டை கிராமத்தில் விவசாயிகளோடு இணைந்து களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.அதில், அப்பகுதி விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் முறை , மதிப்பீடு முறை குறித்து மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.