பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மருத்துவர்கள் திவாகரன், சசிக்குமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, அதன் அறிகுறிகள், கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள், கர்ப்பிணிகள் பேண வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினர். நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், செவிலியர்கள் பங்கேற்றனர்.