ஆலங்குடி அருகேயுள்ள கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் ஹக்கிம், ஆசிரியர்கள், செல்வக்குமார், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.