பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் தலைமை வகித்தார். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஹரிபிரசாத், ஜெய்னபாத்திமா, மதுமிதா, துர்கேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு, இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆர். பிரின்ஸ் நிகழ்வைத் தொகுத்தார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தாஸ், பிரியாதேவி, மதுபாலா, காயத்ரிதேவி ஆகியோர் செய்தனர். ஆசிரியைகளில் ரேவதி வரவேற்றார், மதுபாலா நன்றி கூறினார்.