விராலிமலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை வட்டத்துக்குட்பட்ட கோரை ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் விராலிமலை-கீரனூர் பிரிவு சாலையில் ரோந்து சென்றபோது அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை லாரியை பறிமுதல் செய்தனர்.