புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை குடும்பத் தகராறு காரணமாக 5 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி வசந்தா (30). இவர்களது மகள் முத்தமிழ் (5). தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த வசந்தா, அவரது மகளோடு அப்பகுதியில் உள்ள கிணற்றில் புதன்கிழமை மாலை குதித்துள்ளார். இதில், இருவரும் நீரில் மூழ்கி
இறந்தனர்.
இதுகுறித்த தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.