இலுப்பூர் அருகே நடைபெற்ற தொடர் கிரிக்கெட் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இலுப்பூர் அருகேயுள்ள காஞ்சிராம்பட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் 6-ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டியானது பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிராம்பட்டி சென்னை சிவாபாய்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 13 ஆயிரம் விளாப்பட்டி அணிக்கும், மூன்றாம் பரிசாக ரூ. 9 ஆயிரம் சாங்கிராப்பட்டி அணிக்கும், நான்காம் பரிசாக ரூ. 7 ஆயிரம் இலுப்பூர் ராயல் குரூப்ஸ் அணிக்கும் ரொக்கமாக வழங்கப்பட்டது.