பொன்னமராவதி அருகே உள்ள நெறிஞ்சிக்குடி ஊராட்சியில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். மதியழகன் தலைமையில் ஊராட்சி செயலர் பழனியப்பன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகள்தோறும் முள்புதர்கள், குப்பைகளை அகற்றியும், பிளிச்சிங் பவுடர் தூவியும் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.