புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலரும், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான பெரியண்ணன் அரசு பங்கேற்று மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மூன்று சக்கரவண்டி, தையல்இயந்திரம், வேட்டி சேலைகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ. தங்கம், மாவட்ட திமுக பொருளாளர் ஆ. செந்தில், நகரச் செயலர் க. நைனாமுகமது, மாவட்ட துணைச் செயலர் பெ. ராஜேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மணிமொழிமனோகரன், நகர அவைத்தலைவர் அ.ரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.