அறந்தாங்கி அருகே 144 தடை உத்தரவு

அறந்தாங்கி அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அறந்தாங்கி அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அறந்தாங்கி ஒன்றியம், கம்மங்காடு ஊராட்சி கொத்தக்குடி கிராமத்தில் புலிக்குட்டி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கம்மங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் மட்டும் செய்வதை தடுத்து தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கும்பாபிஷேக பணிகளை வியாழக்கிழமை மாலை தடுத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பி.வி. சரவணன் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, கொத்தக்குடி கிராமத்தில் செப்.14 இரவு முதல் வரும் 28-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் பி.வி. சரவணன் அறிவித்தார். இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com