திருச்சியில் கார் மோதியதில் தம்பதி சாவு: இரு ஓட்டுநர்கள் கைது

திருச்சியில் கார் மோதிய விபத்தில் கணவன் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் விபத்துக்கு காரணமான இரு ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கார் மோதிய விபத்தில் கணவன் - மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் விபத்துக்கு காரணமான இரு ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் ஜீவானந்தம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவரது மனைவி உமாமகேஸ்வரி (38).
செந்தில்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவியுடன் கோவை செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கிஇருசக்கர வாகனத்தில் சென்றனர். செல்லும் வழியில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரிக்கு எதிரே உள்ள ஏடிஎம்-இல் பணம் எடுத்துவிட்டு, வெளியில் வந்து நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, தஞ்சாவூர் நோக்கிச் சென்ற லாரி, அங்குள்ள கல் குவாரிக்குச் செல்வதற்காக திரும்பியது. அச்சமயம் எதிர்புறம் வேகமாக சென்ற கார் லாரி மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த தம்பதி மீது மோதியது.
இதில் தம்பதியினர் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் கரூர் தாந்தோன்றிமலை கருப்பக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (38), கார் ஓட்டுநர் திருவாரூர் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com