புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஷோரூம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
புதிய கடையை டைட்டன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சி.கே. வெங்கட்ராமன் குத்துவிளக்கேற்றி, விற்பனையை தொடங்கிவைத்தார். நிஜாம்பாக்கு உரிமையாளர் சபியுல்லா முதல் வாடிக்கையாளராக நகையைப் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து சி.கே. வெங்கட்ராமன் கூறியது:
நுகர்வோரின் விருப்பத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் இங்கு இயங்கி வந்த டாடா கோல்டு பிளஸ் ஜூவல்லரியை தனிஷ்க் ஷோரூமாக மாற்றியுள்ளோம். தமிழகத்தின் தனிஷிக்கின் 24 -ஆவது நிலையம். இந்திய அளவில் 223 -ஆவது நகைக்கடை ஆகும்.
திறப்பு விழாவை முன்னிட்டு வரும்17ஆம் தேதி வரை தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சத்துக்கு மேல் வைரநகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மண்டல விற்பனை மேலாளர் கிருஷ்ணா, புதுக்கோட்டை கிளையின் உரிமையாளர் முகமது பைசின், மண்டல விற்பனை பிரிவு அதிகாரிகள் உதயகுமார், வசந்த் ராஜா, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.