விராலிமலை வட்டத்தில் செப். 18-இல் உழவர் ஆர்வலர் குழு கூட்டம்

விராலிமலை வட்டத்தில் கூட்டுபண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் ஆர்வலர் குழுக்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை (செப். 18) நடைபெறுகிறது

விராலிமலை வட்டத்தில் கூட்டுபண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் ஆர்வலர் குழுக்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை (செப். 18) நடைபெறுகிறது
இதுகுறித்து விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநர் என்.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விராலிமலை வட்டத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் ஆர்வலர் குழுக்களுக்கான கூட்டம் விராலிமலை ஒன்றியம், தென்னம்பாடி, கொடும்பாளூர், வானதிராயன்பட்டி, விளாப்பட்டி, நீர்பழனி மற்றும் தென்னதிராயன்பட்டி ஆகிய கிராமங்களில் வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு 04339-221351 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com