புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செந்தூரான், மவுன்ட் சீயோன் ஆகிய பொறியியல் கல்லூரிகளில் பொறியாளர் தினவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் செப்.15 -இல் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரியின் தலைவர் இராம. வயிரவன் தலைமை வகித்தார்.
கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக் பேசியது: மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரையாவின் பிறந்த நாளை பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம் எனக் குறிப்பிட்டார். இதில், கல்லூரியின் இயக்குநர் வி.எஸ். வித்யா, ஆராய்ச்சி முனைவர். எம். இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கிடையே நடந்த பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரி: புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து செப்.15 -இல் நடத்திய பொறியாளர் தின விழாவுக்கு, பொறியியல் கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணைஆளுநர் பஷீர் முகமது, கல்லூரி முதல்வர் பி. பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை விருந்தினராக புதுகை மாவட்ட கட்டடப் பொறியாளர் சங்கச் செயலாளர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.
இதையொட்டி புதுக்கோட்டை ரோட்டரி சங்கப் பொறியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
புதுகை கட்டடப் பொறியாளர் சங்கப் பொருளாளர் ரமேஷ், சென்ட்ரல் ரோட்டரி சங்கச் செயலாளர் பிரபாகரதாஸ் வாழ்த்துரை வழங்கினர். சென்ட்ரல் ரோட்டரி சங்க செயலாளர் கதிரேசன் நன்றி கூறினார்.