காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது சாதிக் தலைமை வகித்தார்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்வதோடு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் முகமது கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.