அறந்தாங்கியில் கவிஞர் யாழிசை மணிவண்ணன் எழுதிய பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கிளைத் தலைவர் கவிஞர் சு.கவிபாலா தலைமை வகித்தார்.
ஜடியல் பள்ளித் தாளாளர் பி.ஷேக் சுல்தான், வழக்குரைஞர் பா.வெங்கடேசன், எம்ஜிஆர் கேட்டரிங் கல்லூரி தாளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற மாநிலச் செயலாளர் கவிஞர் ரா. நாணற்காடன் நூலை வெளியிட, நூலாசிரியரின் தாயார் ரா.மாரியம்மாள் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயலாளர் கவிஞர் ஜீவி வாழ்த்திப் பேசினார். முன்னதாக, கவிஞர் சுரேகா வரவேற்றார். கவிஞர் கவி.கார்த்திக் நன்றி கூறினார்.