ஆர்.பாலகுறிச்சியில்  முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே  ஆர்.பாலகுறிச்சி முத்து மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

பொன்னமராவதி அருகே  ஆர்.பாலகுறிச்சி முத்து மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி 
முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 25ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 
விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளிய பின் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. ரகுநாதபட்டி, விடத்தலாம்பட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com