புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள், மகளிர் சம்மேளனத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வேந்திரன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.குமரேசன், பொருளாளர் எம்.முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் முழுக்கங்கள் எழுப்பினர்.
ஆலங்குடியில்... தேசிய மாதர் சம்மேளனத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் இந்திராணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை மாவட்டச் செயலாளர் கண்ணகி, மாதர் சம்மேளத்தின் மாவட்டச் செயலாளர் சுப்புலட்சுமி, பொறுப்பாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.