தமிழ்நாடு எம்ஆர்பி : செவிலியர் மேம்பாட்டுச் சங்க மாவட்டக் கூட்டம்

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் கௌசல்யா, காஞ்சனா ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி பேசினார்.
கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இதர செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும், ஊதியத்தை பணியமர்த்தப்பட்ட நாளில் இருந்து வழங்க வேண்டும். பணி வரன்முறையை நடைமுறைப்படுத்த தேவையான ஆவணங்களை நீதிமன்ற தீர்ப்பின்படி முக்கிய குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ரெங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தினார். சங்கத்தின் மாவட்டச் செயலர் அனுசியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com