கருணாநிதி மறைவு: அரசியல் கட்சியினர் ஊர்வலம், அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர் சார்பில் அஞ்சலி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர் சார்பில் அஞ்சலி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று திலகர் திடலை அடைந்தது. 
தொடர்ந்து அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார்.  இதில், திமுக வடக்கு மாவட்டச்செயலர் பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், காங்கிரஸ் 
மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் மு.மாதவன், மதிமுக மாவட்டச்செயலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com