கூட்டுறவுத் துறையில் காலிப் பணியிடங்கள்  விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர்

கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
 புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறியது:    தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கருணாநிதி இல்லாத திமுக பூஜ்ஜியம் தான். திமுக தலைவர் கருணாநிதி இருக்கும்போதே 1996-க்கு பிறகு 100  இடங்களுக்கும் மேல் வெற்றிபெற முடியவில்லை. இனிமேல் அந்தக் கட்சி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றார்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் 1,162 பயனாளிகளுக்கு ரூ. 4.2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com