சுதந்திரதின விழா போட்டியில் கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் மாணவர்கள் 2 ஆம் பரிசை வென்றுள்ளனர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்களின்போது வித்யா விகாஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் "ஒற்றுமையே வலிமை' என்ற தலைப்பில் நிகழ்த்திய நடன நிகழ்வினைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் 2 ஆம் பரிசை வழங்கி வாழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15 பள்ளிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் சிங்காரவேலு, செயலாளர் குணசேகரன், அறங்காவலர்கள் இராமலிங்கம், இ.முத்துச்சாமி, செயல் அறங்காவலர்கள் பாஸ்கர், டாக்டர் கார்த்திக்கேயன் ஆகியோர் பாராட்டினர். முதுநிலை முதல்வர் மதனகோபால் பள்ளி முதல்வர்கள் வெண்ணிலா, கவிதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடன் இருந்தனர்.