அறந்தாங்கி அருகே மர்மக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே மர்மக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.


அறந்தாங்கி அருகே மர்மக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த ரைஹானத்தம்மாள்(65), கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக, திருச்சி தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாம். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமான நிலையில் அவரை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் கூறியது. தொடர்ந்து, கோட்டைப்பட்டிணம் கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com