பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 9 ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கொன்னைப்பட்டி பழனியாண்டவர் மண்டபத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையினை ராஜப்பா குருக்கள் மந்திரங்கள் ஓதி வழிநடத்தினார்.
பூஜையில் கொன்னைப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளை சார்ந்த 201 பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் நடைபெற உள்ளது.
பூஜை ஏற்பாடுகளை கொன்னைப்பட்டி ஐயப்ப பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.