அறந்தாங்கியில் உலக மனித உரிமைகள் தின விழா

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, அறந்தாங்கி மனித உரிமைகள் கழகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, அறந்தாங்கி மனித உரிமைகள் கழகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநில தலைவர் எஸ். சுரேஷ் கண்ணன் மற்றும் மாநில பொதுச்செயலாளர்  ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி ஆகியோரின் அறிவுறுத்தல்படி, கஜா புயலால் சேதமடைந்த பல்லாயிரக்கணக்கான மரங்களை மீட்டெடுக்கும் விதமாக, அறந்தாங்கி மூக்குடி பொற்குடையார்கோயில் குளக்கரையில்  மரக்கன்றுகளை புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளரும், மாநில பொறியியல்  அணி செயலாளருமான அ. செந்தில் ஆறுமுகம் தலைமையில், மாவட்டச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் முன்னிலையில்  ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் வி. எம்.துரைராஜ்,   அறந்தாங்கி நகர செயலாளர் மணி.சாத்தையா, அறந்தாங்கி ஒன்றியச்செயலாளர்  வி. பாலகிருஷ்ணன் உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com