ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் ரூ. ஒரு லட் சம் நிதியில் வாங்கப்பட்ட புயல் நிவாரணப் பொருள்கள், புதுக்கோட்டை மாவட்ட எச்ஐவி தொற்றாளர்கள் 50 பேருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களுடன் பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்ட பொருள்கள் இந்த நிவாரண உதவியில் அடங்கும். பேராசிரியர் விஸ்வநாதன், டாக்டர் ராமதாஸ், எழுத்தாளர் முத்துநிலவன், ஐக்கிய நலக் கூட்டமைப்பு பசீர் அலி ஆகியோர் இவற்றை வழங்கினர்.
மாவட்ட எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.