கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் திங்கள்கிழமை வருடாபிஷேக விழா நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழா நடைபெற்று ஓராண்டு ஆனதால் சிறப்பு யாகம் செய்து பூஜைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை காலைமுதல் கோயில் பிரகாரத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டன. யாகபூஜை ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.