அரசு ஜீப்புகள் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் 5 அரசு ஜீப்களுக்கு தீவைத்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் 5 அரசு ஜீப்களுக்கு தீவைத்த வழக்கில் மேலும் ஒருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்புக்குள்ளாகி 3 நாள்கள் ஆகியும் அரசு அதிகாரிகள் யாரும் ஆலங்குடி பகுதிக்கு வரவில்லை, நிவாரணப் பொருள்கள் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கொத்தமங்கலத்தில் நவ.18-ஆம் தேதி  இரவு போலீஸார், வருவாய்த் துறையினரின் 5 ஜீப்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக கீரமங்கலம் போலீஸார்,கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட கிராமத்தினர் 62 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர்,  அவர்களுக்கு  நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இந்நிலையில், வழக்கு தொடர்பாக  கொத்தமங்கலத்தைச் சேர்ந்த  ஆர்.துரையை(51) கீரமங்கலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com