திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்த மணிமாலாவைத் தற்கொலைக்கு தூண்டிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை, சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் அருகே தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் க. கவுசல்யா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், செவிலியர் மணிமாலா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செவிலியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திகா , பொருளாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.