புதுக்கோட்டையில், மதுப்பழக்கம், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார். சார்- ஆட்சியர் கே.எம்.சரயு முன்னிலை வகித்தார். பேரணியில், அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்று மது அருந்துதல், கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழ ராஜ வீதி, பிருந்தாவனம் வழியாக ஊர்வலமாக சென்று நகர்மன்றத்தை அடைந்தனர்.