அன்னவாசல் அருகேயுள்ள கிளிக்குடியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன். இவர், கடந்த ஜன. 12 ஆம் தேதி வலையபட்டி கிராமத்தில் பழனி பாதயாத்திரை குழுவினரின் அன்னதான விழாவில் வேட்டியை மடித்துக் கொண்டு நின்றதாகவும், அதற்கு மாற்று வகுப்பைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை ஜாதியைச் சொல்லி திட்டி, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ஜன. 13 வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மணிகண்டன், பாண்டிச்செல்வம், கருப்பையா, சந்தோஷ், பாலமுருகன்,
கண்ணன் உள்ளிட்ட 6 பேரை மற்ற வகுப்பைச் சேர்ந்த சிலர் பஞ்சா யத்தார்கள் காலில் விழச்சொல்லி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மணிகண்டன், மாவட்ட எஸ்.பி செல்வராஜிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அன்னவாசல் போலீஸார் மாற்று வகுப்பைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.