ஆலங்குடியில் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

ஆலங்குடியில், திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில், திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒன்றிய அவைத்தலைவர் அருளானந்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், புதுகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருமயம் எம்எல்ஏ உறுப்பினருமான எஸ்.ரகுபதி, புதுகை தெற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள், தலைமை அனுப்பியுள்ள அனுமதி கடிதம் உள்ளிட்டவற்றுடன் பிப். 16 ஆம் தேதி செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்கும் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் கழகப் பணிகள், ஆலோசனை மற்றும் புகார்கள் குறித்து மனு அளிக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com