புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மதுப்பழக்கம், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை வட்டாட்சியர் ரெத்தினாவதி தொடக்கி வைத்தார்.
மதுப்பழக்கம், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர்.
ஆலங்குடி பேருந்து நிலையம், அரசுமரம் பேருந்து நிறுத்தம், வடகாடு முக்கம், பள்ளிவாசல் தெரு வழியாகச் சென்ற பேரணி மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் தனி வட்டாட்சியர்கள் மனோகரன், யோகேசுவரன், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசேவியர், கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.