காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 57-வது ஆண்டு உதய தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அறந்தாங்கி எல்ஐசி அலுவலகம் முன் காப்பீட்டுக் கழக கொடியை சங்கத்தின் அறந்தாங்கி கிளைத் தலைவர் கே. ரகுமத்துல்லா ஏற்றி இனிப்பு வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினர் அ. பாலசுப்பிரமணியன் தொழிற்சங்கம் உருவான வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். கிளைச் செயலர் என். செந்தில்குமார், சங்க நிர்வாகிகள் வி. முத்துவேல், அய்யப்பன், விஜய், அருணாசலம், குமார், நிரஞ்சனாதேவி, ராணி, மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.