கந்தர்வகோட்டை அருகே புதன்கிழமை சாலையில் சென்ற மினிவேன் தீப்பற்றி நாசமானது.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள பெருங்களூர் ஊராட்சியைச் சேர்ந்த ம. கேசகுமாருக்குச் சொந்தமான டாடா ஏசி மினிவேன் பெருங்களூரிலிருந்து தஞ்சாவூருக்கு சரக்கு ஏற்ற புதுக்கோட்டை-தஞ்சை சாலையில் சென்றது. சோழகம்பட்டி அருகே சென்றபோது வேனின் என்ஜினிலிருந்து புகை வரவே, சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ வேகமாக பரவியதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.