சுற்றுச்சூழல்  பாதுகாப்பு  விழிப்புணர்வுப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியை ஜெ. சாந்தி தலைமை வகித்தார். பயிற்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட  திண்ணைத் திட்ட பொறுப்பாளர் சங்கவி தர்மா பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க முன் வர வேண்டும். உங்களது கிராமத்தை முழு சுகாதார கிராமமாக மாற்ற  உறுதி மொழி எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக முதலிடம் நோக்கி, நீர்த்துளி உயிர்த்துளி ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.முடிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை மாணவ,  மாணவிகள் எடுத்துக் கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் பாதை இயக்க திண்ணைத் திட்ட பொறுப்பாளர்கள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com