மனைவி இறந்த துக்கம்: இளைஞர் தற்கொலை

விராலிமலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் இளைஞர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விராலிமலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் இளைஞர் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
விராலிமலை அருகேயுள்ள வேலூர் வேடம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் முருகன் என்ற பாலசுப்பிரமணி (34).  கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இவர்  புதன்கிழமை விராலிமலை அருகேயுள்ள பாத்திமாநகர் முருகன் கோயில் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். 
அவ்வழியே சென்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த மருத்துவர்  பாலசுப்பிரமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.  இறந்தவரின் சகோதரர் திருப்பதி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com