குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள்

கந்தர்வகோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வுப் பேரணியை வட்டாட்சியர் க. பொன்மலர் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேரணியில், குழந்தைகள் பாதுகாப்பு முறைகள், குழந்தைகள் பள்ளி படிப்பு, விழிப்புணர்வு, குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து விழிப்புணர்வுப் பதாகைகள் மூலமாகவும், கோஷங்கள் எழுப்பியும் கந்தர்வகோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை வந்தடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com