கந்தர்வகோட்டை வட்டார வங்கியாளர்கள் ஆலோசனை

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஆலோசனை கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், கிராமப் பகுதிகளில் வங்கியாளர்கள் எவ்வாறு பணியாற்றுவது, நிதி சார் கல்வி மற்றும் வங்கி சேவைத் திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , நபார்டு , தாட்கோ, சிட்கோ, மாவட்டத் தொழில் மையம் போன்ற அரசு நிறுவனங்களில் இருந்து மானியத்துடன் கூடிய கடன் வசதிகளைப் பெறுவது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்பட்டது. சுயஉதவிக் குழு அமைப்பு கூட்டங்கள், கிராம சபைக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களில் வங்கிச் சேவைகள் பற்றி விவரங்களை தெரியப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது. 
கூட்டத்தில், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சோமசுந்தரம், இந்தியன் வங்கி நிதிசார் கல்வி மைய ஆலோசகர் வீரப்பன், தாட்கோ நிறுவன மாவட்ட மேலாளர் கோபால் , ஐ.ஓ.பி. வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் சரண்யா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நலதேவன் உள்ளிட்ட  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com