காவல் நிலையம் புகுந்து காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கந்தர்வகோட்டையில் காவல் நிலையத்துக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்து காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் க

கந்தர்வகோட்டையில் காவல் நிலையத்துக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்து காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
கந்தர்வகோட்டை அடுத்துள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகானந்தம் (38). இவர் நாம்தமிழர் கட்சியின்  தொகுதி செயலாளராக உள்ளார். இவர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்குள் திங்கள்கிழமை இரவு குடிபோதையில் அத்துமீறி நுழைந்து, பணியில் இருந்த உதவி பெண் ஆய்வாளரிடம் தகராறு செய்து, காவல்நிலைய எழுத்தர் ராஜ தயாளன்(26) பணி செய்யவிடாமல் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் செய்துள்ளார். இதுகுறித்து நிலைய எழுத்தர் ராஜ தயாளன்,  முருகானந்தம் மீது காவல் உதவி ஆய்வாளர் பிரபுவிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் ரா.முருகானந்தத்தைக் கைது செய்த போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com