புதுக்கோட்டையில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப். 22 (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆட்சியரக செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமையில் பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள், தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.